தகவல் அறியும் சட்டம் பொது மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அரசு அலுவலகங்களில் தங்களுக்கு வேண்டிய நிவாரணம் பெற மிக எளிய வழி இது. தாங்கள் கேட்கும் விபரங்களை சம்பந்தபட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தங்களுக்கு தர கடமைப்பட்டுள்ளார். இதை மீறும் அதிகாரிகள் அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படவும் வழி உள்ளது.
நாம் நமக்கு தேவையான விபரங்களை எப்படி கேட்பது-? அதற்கு என்ன கட்டணம்? எத்தனை நாட்களில் பதில் கிடைக்கும்? பதில் கிடைக்காவிட்டால் என்ன செய்வது? என்பதில் இருந்து நமது மனு எந்த நிலையில் உள்ளது எனத் தெரிந்து கொள்ள மற்றும் பல பல விசயங்களை இங்கு காணலாம்.
ஓரே ஒரு குறை, இது தமிழ்நாடு அரசு இணையதளம் ஆனால் விபரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது. அரசு இதனை கவனித்தால் நல்லது.
|
No comments:
Post a Comment