Monday, April 2, 2012

சந்தான பாண்டியன் அல்ல! சாக்கடை பாண்டியன் 2


நியாயம் கேட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை இது.  நடுரோட்டில் ஒரு டிஎஸ்பி அதை செய்திருக்கிறான். அவனுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தவன் எவன்யாரை வேண்டுமானாலும் அடிக்கலாம் என்கிற தைரியமும், தெனாவெட்டும் அவனுக்கு எப்படி வந்தது? இப்படிப்பட்ட வெறிநாய்களுக்கு காவல்துறை உடையை யார் வழங்கியது?

இந்த தேசத்தின் பிரஜைகளுக்கு அதிகார வர்க்கமும், அமைப்பும் கொடுக்கிற பதிலாக இதுதான் இருக்குமென்றால், அதைப் பார்த்துக்கொண்டு மௌனம் சாதிக்கிற  இந்த அரசுகளை யார் தூக்கில் போடுவது?

படித்தவர்களுக்கே இந்த கதியென்றால், படிக்காத எம் நாட்டின் சாதாரண மனிதர்களை வெறி பிடித்த ஏவல் நாய்கள் என்ன பாடுபடுத்தும்?

இந்தக் கேள்விகளுக்கு பதிலும் ஒரு கேள்விதான். அந்த பொறுக்கி டிஎஸ்பியை மக்கள் செருப்பால் அடிக்கலாமா வேண்டாமா?

அரசு விசாரிப்பது இருக்கட்டும். முதலில் மக்கள் நாம் விசாரிப்போம்.
kashyapan says:
மாதவ் ஜி அவர்களே! ஆசிரியர்கள், தொழிற் சங்கங்கள், அரசியல் தலைவர்கள், அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள் , கலைஞர்கள்,தலித் தலைவர்கள்,வாயில் கொழுக்கொட்டையை வைத்திருக்கிறார்களா? பொங்கி எழுந்திருக்க வேண்டாமா?---காஸ்யப

eswaran says:
வரிப் பணத்தில் வயிற்றை கழுவும் இது போன்ற நன்றி கெட்ட போலீஸ் மிருகங்களை செருப்பால்அடி கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment