Wednesday, April 4, 2012

அஸ்ரா கார்க்கை மாற்றக் கூடாது


விருதுநகர் மாவட்டம் முழுவதும் இது போன்ற சுவரொட்டி தென்படுகிறது. அனாமதேய சுவரொட்டி தான். எனினும் பாதிக்க பட்ட யாரோ ஒருவர் தனக்கு நீதி அஸ்ரா கார்க் மூலம் கிடைத்ததையொட்டி தனது நன்றியை தெரிவிக்கும் முகமாக இதை ஒட்டியுள்ளார் போலும்.

எனக்கு தெரிந்து காவல்துறை வட்டத்தில் நல்ல பல முயற்சிகள் அஸ்ரா கார்க் செய்துள்ளார். நில மோசடி வழக்கில் ஒரு வி.ஐ.பி அல்லது முக்கியஸ்தர்....¢ இல்லைங்க பல நாட்கள் மாட்டாத ஒரு நபர் என்று சொல்வது தான் தகும் என்பவர் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

எனினும் அரசு பணியில் இருப்பவரை மாற்றக் கூடாது என பொது மக்கள் நினைக்கும் வண்ணம் செயல்படும் போது தான் அந்த பதவிக்கும் அவருக்கும் மரியாதையே தவிர அரசு கொடுக்கும் மெடல்கள் மற்றும் பிற ஆகியன எல்லாம் வெறும் சும்மா.


No comments:

Post a Comment